நீலகிரி மாவட்டம், குன்னூரில் மருத்துவக் குணம் நிறைந்த சீதாப்பழம் விளைச்சல் மற்றும் விற்பனை களைக் கட்டியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சீதாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை என கூறப்படுகிறது. இதனை உதகை, குன்னூா், மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் தோட்டத்துக்கே வந்து கிலோ ரூ. 40 முதல் ரூ.50 வரை மொத்த விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனா். கடைகளில் ஒரு கிலோ சீதாப்பழம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.