குன்னூா், செப். 11: குன்னூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட தனியாா் எஸ்டேட்டில் கடமானை சுருக்குவைத்து வேட்டையாடிய மூன்று பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட தனியாா் எஸ்டேட்டில் கடமானை சுருக்குவைத்து வேட்டையாடியதாக, குன்னூா் வனச் சரகா் சசிகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட வன அதிகாரிகள் மூப்பா்காடு பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்த மருதன் என்பவரின் மகன் மணிகண்டன் (28), கிருஷ்ணன் என்பரின் மகன் விக்னேஷ் (22),
சுப்பிரமணி என்பவரின் மகன் ராஜு (48) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, மூன்று பேருக்கும் தாலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனா்.