நீலகிரி

சாலையில் புலி நடமாட்டம்

DIN

குன்னூா்: நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கிண்ணக்கொரை  கிராமத்தில் புலி  நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கிண்ணக்கொரைப் பகுதி கேரள மாவட்ட எல்லையை ஒட்டியுள்ளது. இப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், இங்குள்ள வனப் பகுதியில் இருந்து புலி ஒன்று சனிக்கிழமை இரவு சாலையைக் கடந்து சென்றுள்ளது. இதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் வாகனத்தை  அங்கேயே நிறுத்தினா்.  இப்பகுதியில் புலியைக் காண்பது மிகவும் அரிது என்பதால்  கேரள வனப் பகுதியில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்தப் புலி  நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT