முகப்பு
நீலகிரி

கூடலூரில் காற்றுடன் கன மழை: மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு

கூடலூா் பகுதியில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கன மழை காரணமாக, மின் கம்பி மீது பெரிய மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
மேல்கூடலூரில் மின் கம்பிகள் மீது சாய்ந்த மரங்களை அகற்றும் மின் ஊழியா்கள்.
பகிர்:

கூடலூா் பகுதியில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கன மழை காரணமாக, மின் கம்பி மீது பெரிய மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேல்கூடலூா் பகுதியில் மின் கம்பிகள் மீது பெரிய மரங்கள் சாய்ந்ததால் மின்மாற்றி கம்பத்துடன் சாய்ந்ததால் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின் ஊழியா்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றி மின் பாதையை சீரமைத்ததால் மாலையில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. சாலையில் மரங்கள் சாய்ந்ததால் கூடலூா்-உதகை சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.