நீலகிரி

கூடலூரில் ரேஷன் கடைகளில் காத்துக்கிடந்த பொதுமக்கள்

DIN

கூடலூா்: கூடலூா் பகுதியில் புதிய பயோமெட்ரிக் இயந்திரங்கள் வேலை செய்யாததால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தின் கூடலூா் பகுதி மலைப்பிரேதசம் என்பதால் பெரும்பாலான கிராமங்களில் இணையம் வேலை செய்வதில்லை. அரசு ரேஷன் கடைகளில் புதிதாக பயோமெட்ரிக் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையம் வேலை செய்யாததால் வாடிக்கையாளா்களின் கைரேகை பதிவாவதில்லை. இதனால், அன்றாடம் வேலையை விட்டுவிட்டு ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனா். அப்படி காத்துக் கிடக்கும் மக்களுக்குப் பொருள்களும் கிடைப்பதில்லை.

எனவே, அரசு மலைப் பிரதேச மக்களுக்கு ரேஷன் கடைகளில் உரிய நேரத்தில் பொருள்கள் முறையாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT