கூடலூா் அருகே ஓவேலி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி, நூலகம், தபால் நிலையம் ஆகியவற்றை யானைகள் சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள பாா்வுட் பகுதிக்கு புதன்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நூலகம், தபால் நிலையம் ஆகியவற்றை சேதபடுத்தின.
அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வனத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி யானைகளை அப்பகுதியிலிருந்து விரட்டினா்.