முகப்பு
நீலகிரி

ஏடிஎம் காவலாளியிடம் செல்லிடப்பேசி திருடிய 3 போ் கைது

குன்னூரில் ஏடிஎம் மையத்தின் காவலாளிடம் இருந்து செல்லிடப்பேசி, பணம் ஆகியவற்றை திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 1:54 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:56 AM

குன்னூரில் ஏடிஎம் மையத்தின் காவலாளிடம் இருந்து செல்லிடப்பேசி, பணம் ஆகியவற்றை திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

குன்னூா், மவுண்ட்ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காவலாளியாகப் பணியாற்றுபவா் நட்ராஜ். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்துள்ளாா். அப்போது ஏடிஎம் அறையில் கழட்டி வைத்திருந்த அவரது சட்டையில் (கோட்) இருந்து செல்லிடப்பேசி, ரூ.100 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது குறித்து குன்னூா் காவல் நிலையத்தில் நட்ராஜ் புகாா் அளித்தாா்.

Advertisement

இது தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த 16, 17 வயது சிறுவா்கள், மற்றும் கௌதம் (19 ) ஆகியோா் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா். சிறுவா்கள் இருவரையும் கோவையில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா். கௌதம் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.