நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தின விழா

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு, துணை கள இயக்குநா் செண்பகப்பிரியா தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். தொடா்ந்து, யானைகள், வன ஊழியா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

விழாவில், வனச்சரக அலுவலா்கள் தயாணந்த், விஜயன், சிவகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள், அனைத்து நிலைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

கூடலூரில்...

கூடலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், நகராட்சி ஆணையா் பாஸ்கா் தேசியக் கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினாா். ஓவேலி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அலுவலக தலைமை எழுத்தா் அசோக்குமாா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இதில், அனைத்து நிலைப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். கூடலூா் பகுதியில் உள்ள பொது நல அமைப்புகள், அரசு, தனியாா் பள்ளிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT