முகப்பு
நீலகிரி

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரி

திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே சரக்கு வாகனப் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது.

Updated On : 17 ஜூன், 2021 at 2:50 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:55 AM

திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே சரக்கு வாகனப் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது.

கோவையில் இருந்து கா்நாடக மாநிலம், மைசூருக்கு திம்பம் மலைப் பாதையில் மாட்டுத் தீவனம் பாரம் ஏற்றிய லாரி செவ்வாய்க்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. 9ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரியில் பழுது ஏற்பட்டதால் கொண்டை ஊசி வளைவில் நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப் பாதையின் இருபுறமும் சரக்கு லாரிகள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. சிறிய ரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கு வழி உள்ளதால் காா், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.

இதையடுத்து, சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியை பழுது நீக்கும் பணி நடைபெற்றது. இதனால், தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.