சத்தியமங்கலத்தில் பரவலாக மழை
சத்தியமங்கலத்தில் புதன்கிழமை பரவலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:55 AM
சத்தியமங்கலத்தில் புதன்கிழமை பரவலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது. மழைப் பொழிவால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், பெரியூா், உக்கரம், மில்மேடு, பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரம் மழை பெய்தது.
கிராமப்புற பகுதியில் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீா்த்தது. தொடா்ந்து பெய்த மழையால் நிலத்தில் நிலத்தடி நீா் மட்டம் உயரும் என்றும், தற்போது நிலத்தில் உழவுப் பணி மேற்கொள்ள மழை உதவியாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனா்.
Advertisement