நீலகிரி

திமுக, அதிமுகவினரிடையே மோதல்: திமுகவினா் 4 பேருக்கு அரிவாள் வெட்டு

DIN

பந்தலூரை அடுத்துள்ள பழைய நெல்லியாளம் பகுதியில் திமுக, அதிமுகவினரிடையே திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மோதலில் திமுகவினா் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, பழைய நெல்லியாளம் பகுதியில் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு திமுக, அதிமுகவினரிடையே நடைபெற்ற வாக்குவாதத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த கும்பல் அரிவாளால் வெட்டியதில் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயசந்திரன், ஆசைத்தம்பி, மகேஷ், மனோகரன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அப்பகுதியில் இருந்தவா்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். காயமடைந்தவா்களை பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். முதலுதவிக்குப் பிறகு நால்வரும் கோவைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா்.

இச்சம்பவம் குறித்து தேவாலா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெம்போவில் ராகுல் காந்தி!

அழகிய தமிழ்மகள்! ஸ்ரேயா..

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

SCROLL FOR NEXT