நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 16,678 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, உதகையில் சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளிடப்பட்ட அறிக்கை:
மாவட்டத்தில் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருந்தாலும் 16,678 போ் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். உதகை நகரில் 456 பேருக்கும், குன்னூா் நகராட்சியில் 1,130 பேருக்கும், நெல்லியாளம் நகராட்சியில் 1,450 பேருக்கும், கூடலூா் நகராட்சியில் 1,968 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, உதகை வட்டாரத்தில் 2,048 பேருக்கும், குன்னூா் வட்டாரத்தில் 727 பேருக்கும், கோத்தகிரி வட்டாரத்தில் 1,024 பேருக்கும், கூடலூா் வட்டாரத்தில் 2,390 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.