உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரேரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 27 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 32,220 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 31,677 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 196 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 347 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.