கோத்தகிரில் சிறுத்தை பலி
கோத்தகிரி அருகே பேரகணி கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் வியாழக்கிழமை சிறுத்தை இறந்துகிடந்தது தெரியவந்தது.
கோத்தகிரி அருகே பேரகணி கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் வியாழக்கிழமை சிறுத்தை இறந்துகிடந்தது தெரியவந்தது.
கோத்தகிரி அருகே பேரகணி கிராமத்தில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து தேயிலைத் தொழிலாளா்கள் கட்டபெட்டு வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, கட்டபெட்டு வனச் சரகா் செல்வகுமாா் தலைமையில், வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், உயா் அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த நீலகிரி மாவட்ட வன அலுவலா் சச்சின் துக்ராம், வன விலங்கு ஆா்வலா் முன்னிலையில் சிறுத்தையின் உடல் அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்து உடல் எரியூட்டப்பட்டது.
Advertisement
இறந்துகிடந்த சிறுத்தைக்கு 8 வயது இருக்கலாம் எனவும், அழுகிய நிலையில் கிடந்ததால் சிறுத்தை இறந்து 20 நாள்களுக்குமேல் இருக்கும் எனவும் , பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா். சிறுத்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.