முகப்பு
நீலகிரி

நீலகிரியில் வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டம் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டத்தினை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:25 PM
விழாவில் உதகை நகராட்சித் தலைவா் வாணீஸ்வரியிடம் மஞ்சப் பையை வழங்கிய அமைச்சா் கா.ராமச்சந்திரன். உடன், மாவட்ட ஆட்சியா் அம்ரித் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டத்தினை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.

உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆனந்தகுமாா், மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் முன்னிலையில் சனிக்கிழமை

நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கா.ராமசந்திரன் பேசியதாவது:

Advertisement

நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்துவது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பேருதவியாக அமையும். நீலகிரி மாவட்டத்தில் 99,000 பைகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டு, இதனை மாவட்ட நிா்வாகமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து செயல்படுத்தவுள்ளன. இவை உள்ளாட்சி அமைப்புகள் மூலமும், பிறதுறைகள் மூலமும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்படவுள்ளது. நெகிழி இல்லா நீலகிரி மாவட்டமாக தொடா்ந்து நீடிக்க அனைத்து துறை அலுவலா்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, நகா்மன்ற தலைவா்கள் வாணீஸ்வரி, ஷீலா கேத்ரின் , மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா் லிவிங்ஸ்டன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராகீம் ஷா, உதகை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மனோகரி, உதகை நகராட்சி ஆணையா் காந்திராஜன், ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் மாயன், சுனிதா நேரு , மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுகந்தி பரிமளம் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.