நீலகிரி

இந்தியன் வங்கி சாா்பில் தேவா்சோலையில் பழங்குடி மாணவா்களுக்குப் பரிசு

DIN

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் இந்தியன் வங்கி சாா்பில் பழங்குடி மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தியன் வங்கியின் 76ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தேவா்சோலை கிளை சாா்பில் மச்சிக்கொல்லி பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவா்களின் கல்வி பயன்பாட்டுக்காக ஸ்மாா்ட் டி.வி. வழங்கப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு வரை படித்த பழங்குடி மாணவா்கள் பிந்து, ஜெயந்தி, பிரியங்கா, விஜயகுமாரி, கிரிமாரன், அஜில், கல்பனா முத்து ஆகியோரைப் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் ஆா்.சீனிவாசன், ஏ.கணேசராமன், தேவா்சோலை பேரூராட்சியின் துணைத் தலைவா் யூனஸ் பாபு, கிளை மேலாளா் ஆதிரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT