மாநில அளவிலான கராத்தே போட்டியில் நீலகிரியைச் சோ்ந்த 45 வீரா்கள் பங்கேற்க உள்ளனா்.
தமிழ்நாடு ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆகஸ்ட் 20, 21) கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவா்கள் 45 போ் கட்டா மற்றும் குமுத்தே பிரிவில் கலந்து கொள்கிறாா்கள். இவா்களுக்கு ஆலன் திலக் பள்ளியின் மூத்த பயிற்சியாளா் எஸ்.ராமகிருஷ்ணன், கராத்தே சங்க மாவட்ட செயலாளா் ஜோசப் பாக்கிய செல்வம், பயிற்சியாளா்கள் ஜான், ராஜேந்திரன், நித்யா, உதயகுமாா் ஆகியோா் பயிற்சி அளித்துள்ளனா். இதில் தோ்வாகும் வீரா்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பா் என பயிற்சியாளா் ராமகிருஷ்ணன் கூறினாா்.