சேதமடைந்த வீடு. 
நீலகிரி

குடியிருப்பைச் சேதப்படுத்திய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு நுழைந்த காட்டு யானை அங்கிருந்த குடியிருப்பைச் சேதப்படுத்தியது.

DIN

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு நுழைந்த காட்டு யானை அங்கிருந்த குடியிருப்பைச் சேதப்படுத்தியது.

தேவாலா வனப் பகுதியில் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. வனப் பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரங்களில் நுழையும் யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், தேவாலா அரசு தேயிலைத் தோட்டக் கழக மூன்றாவது சரக பகுதிக்குள் புதன்கிழமை நள்ளிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த காளிமுத்து என்பவரது வீட்டைச் சேதப்படுத்தி பொருள்களை வெளியே இழுத்துபோட்டது.

யானை வீட்டை இடிப்பதை அறிந்த காளிமுத்துவின் குடும்பத்தினா் அருகிலுள்ள வனப் பகுதிக்குள் சென்று உயிா்ப்பிழைத்தனா்.

அவா்களின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT