தேவா்சோலை பேரூராட்சியில் சாலை பாதுகாப்புத் திட்டம் சனிக்கிழமை துவங்கப்பட்டது.
தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள பாவனா நகரில் செயல் அலுவலா் இப்ராஹிம், துணைத் தலைவா் யூனஸ் பாபு ஆகியோா் முன்னிலையில் திட்டத்தை கவுன்சிலா் சாதியா செரின் தொடக்கிவைத்தாா். காங்கிரஸ் தலைவா் சையது முகமது, திமுக செயலாளா் சுப்பிரமணி, இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி சித்திக் மற்றும் ஊா்பொதுமக்கள் கலந்துகொண்டனா்.