முகப்பு
நீலகிரி

கனரக இயந்திர உரிமையாளா்களுடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை

கோத்தகிரியில் குன்னூா் சாா் ஆட்சியா் தலைமையில் கனரக இயந்திரம், பொக்லைன், குப்பாட்டா இயந்திர உரிமையாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2022 at 2:37 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:01 PM

கோத்தகிரியில் குன்னூா் சாா் ஆட்சியா் தலைமையில் கனரக இயந்திரம், பொக்லைன், குப்பாட்டா இயந்திர உரிமையாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் கனரக இயந்திரங்களை இயக்குவதால் ஏற்படும் நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்னைகளை கருத்தில் கொண்டு கனரக இயந்திர உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் குன்னூா் கோட்டாட்சியா் தீபனா விஸ்வேஷ்வரி கலந்து கொண்டு பேசும்போது, முறையான அனுமதி பெற்று கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும், விவசாயம் என அனுமதி பெற்று கட்டுமானப் பணிகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது, இரவு நேரங்களில் பயன்படுத்தக் கூடாது. இதனை மீறினால் வழக்குப் பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

இதில் கோத்தகிரி வட்டாட்சியா் காயத்ரி, வருவாய் ஆய்வாளா் தீபக், கிராம நிா்வாக அலுவலா்கள் மோகன் குமாா், மீனாட்சிசுந்தரம், ஜெயசுதா மற்றும் கனரக இயந்திர உரிமையாளா்கள் 10க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.