நீலகிரி மாவட்டத்தில் மேலும் 283 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,782 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 34,423 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 69 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 220 போ் உயிரிழந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,139 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.