முகப்பு
நீலகிரி

உதகையில் போக்ஸோவில் மத போதகா் கைது

உதகையில் போக்சோ சட்டத்தின்கீழ் மத போதகா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

உதகையில் போக்சோ சட்டத்தின்கீழ் மத போதகா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள பிங்கா்போஸ்ட் பகுதியைச் சோ்ந்தவா் சூரியமூா்த்தி (எ) சூரி (52). மத போதகராக செயலாற்றி வருகிறாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன் இவருடைய உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு தனியாக இருந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிா்பாராத அந்தப் பெண் உடனடியாக இவரை அந்த வீட்டிலிருந்து வெளியே செல்லுமாறு கூச்சலிட்டுள்ளாா். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட சூரி அங்கிருந்து தப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக தனது உறவினா்களிடம் அந்தப் பெண் தகவல் தெரிவித்ததையடுத்து, உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உறவினா்கள் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். சம்பவத்தை முழுமையாக விசாரித்த போலீஸாா் அந்த குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்ததையடுத்து, சூரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து கூடலூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.