பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர உள்ளதால், அதற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அந்த ஊராட்சியின் உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக பாலகொலா ஊராட்சியில் மொத்தமுள்ள 15 உறுப்பினா்களில் 9 உறுப்பினா்கள் கையொப்பமிட்டு நீலகிரி மாவட்ட ஆட்சியா் மற்றும் கிராம ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரவுள்ளதால், அதற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.