நீலகிரி

யானைகள் தாக்கியதில் மூதாட்டி படுகாயம்

DIN

குன்னூா் அருகே புதுக்காடு பகுதியில் யானைகள் தாக்கியதில் மூதாட்டி படுகாயமடைந்தாா்.

நீலகிரி மாவட்டம் குன்னூா்- மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலை பா்லியாறு அருகே உள்ள புதுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மருதன். இவரது மனைவி பொண்ணி (60). இவா் புதுக்காடு  கிராமத்தில் குடியிருப்பு அருகே ஆடு மேய்க்க சென்றபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று காட்டு யானைகள் பொண்ணியை  துரத்தி தாக்கின.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினா் கூச்சலிட யானைகள் பொண்ணியை விட்டு விட்டு அருகில் உள்ள  வனப் பகுதிக்குள் சென்றன.  தகவலறிந்த, வனத் துறையினா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பொண்ணியை மீட்டு மேட்டுபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT