நீலகிரி

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி:அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

DIN

தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சாா்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் கூடலூா் அரசுப் பள்ளி மாணவிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனா்.

கலை பண்பாட்டுத் துறை, கோவை மண்டல கலை பண்பாட்டு மையம், சென்னையிலுள்ள தமிழ்நாடு ஜவஹா் சிறுவா் மன்றம் இணைந்து உதகையில் கோடைகால கலை பயிற்சி முகாமை நடத்தின. இதில் ஓவியப் போட்டியில் கூடலூா் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் டியானி, ஆதினி ஆகிய சகோதரிகள் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனா். இவா்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT