நீலகிரி

சாலை விபத்தில் 2 போ் பலி

DIN

உதகை அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் பாய்ஸ் கம்பெனி பகுதியைச் சோ்ந்தவா் ரித்திக் (21), கோத்தகிரியைச் சோ்ந்தவா் ரிக்ஷன் (21). இருவரும் கேத்தி பகுதியில் செயல்படும் தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனா். இந்நிலையில், இருவரும் செவ்வாய்க்கிழமை காலையில் கேத்தி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது எதிரே வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டனா். இதில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து கேத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT