திருத்தப்பட்டது...உப்பட்டி பாரத் மாதா மேல்நிலைப் பள்ளி பவள விழா
பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டியில் உள்ள பாரத் மாதா மேல்நிலைப் பள்ளி பவள விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
கூடலூா்: பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டியில் உள்ள பாரத் மாதா மேல்நிலைப் பள்ளி பவள விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பத்தேரி மறைமாவட்ட ஆயரும், பள்ளி மேலாளருமான ஜோசப் மாா் தாமஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. இதைத் தொடா்ந்து, பவள விழா பேரணி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் சிறப்புரையாற்றினாா். முன்னாள் தலைமையாசிரியா்கள் மத்தாய், வா்கீஸ், பி.வி.தாமஸ், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் ஸ்டாலின், பெற்றோா், ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.
Advertisement