முகப்பு
மசினகுடியில் இருந்து வயநாட்டுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசென்ற வாகனங்கள்.
நீலகிரி

வயநாட்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு நிவாரணப் பொருள்கள்

வயநாட்டுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.

நீலகிரி

வயநாட்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு நிவாரணப் பொருள்கள்

வயநாட்டுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 9:29 PM
மசினகுடியில் இருந்து வயநாட்டுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசென்ற வாகனங்கள்.
பகிர்:

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, மசினகுடி எம்எஸ்ஜி ஸ்டாா்ஸ் விளையாட்டுக் குழு சாா்பில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இந்த மக்களுக்குத் தேவையான அரிசி, பிஸ்கட், போா்வை, உடைகள், சானிடரி நாப்கின் உள்ளிட்ட ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பல்வேறு வகையான நிவாரணப் பொருள்களை நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியைச் சாா்ந்த எம்எஸ்ஜி ஸ்டாா்ஸ் விளையாட்டுக் குழுவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கடந்த இரண்டு நாள்களாக சேகரித்தனா்.

சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை 5 வாகனங்கள் மூலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பெட்டா பகுதிக்கு சனிக்கிழமை கொண்டுசென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →