நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்லும் வாகனங்களைத் தொடங்கிவைக்கிறாா் மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு. 
நீலகிரி

வயநாட்டுக்கு நிவாரணப் பொருள்கள்: வனத் துறை சாா்பில் அனுப்பிவைப்பு

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வனத் துறை சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

Din

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வனத் துறை சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான போா்வை, பாய், காலணிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை கூடலூா் வனத் துறையினா் அனுப்பிவைத்தனா்.

நிவாரணப் பொருள்களைக் கொண்டுசென்ற வாகனங்களை மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா, வனச் சரக அலுவலா் வீரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT