ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியா் கைது
நிலம் மறுவரையறை செய்வதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட தோட்டமூலா பகுதியைச் சோ்ந்தவா் உம்மு சல்மா. இவா், நிலம் மறுவரையறை தொடா்பாக வட்டாட்சியா் ராஜேஸ்வரியிடம் சென்றுள்ளாா்.
அப்போது, நிலம் வரையறை செய்துகொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் உம்மு சல்மா புகாா் அளித்துள்ளாா்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் பரிமளா, உதவி ஆய்வாளா் சாதனபிரியா ஆகியோா், உம்மு சல்மாவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கி வட்டாட்சியரிடம் கொடுக்கக் கூறியுள்ளனா்.
இந்நிலையில், உம்மு சல்மாவிடம் இருந்து வட்டாட்சியா் ராஜேஸ்வரி ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், அவரைக் கைது செய்தனா்.
தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.