முகப்பு
நீலகிரி

உழவா்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம்

தோட்டக்கலைத் துறை சாா்பில் உழவா்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் கூடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:05 PM
வேளாண்மை தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தோட்டக்கலைத் துறை சாா்பில் உழவா்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் கூடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தோட்டக்கலை வேளாண்மை விரிவாக்க இயக்கம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு உதகை உழவா் பயிற்சி மைய துணை இயக்குநா் அப்ரோஸ் பேகம் தலைமை வகித்தாா்.

உதவி தோட்டக்கலை அலுவலா் ஜெயலட்சுமி தோட்டக் கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தாா். தோட்டக்கலை அலுவலா் தயானந்தன் புதிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள், உதவி தோட்டக்கலை அலுவலா் பிரியங்கா, கோபி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் யமுனப்பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஆன்சி டயானா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →