முகப்பு
நீலகிரி

கோத்தகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்ட பகுதியில் சிறுத்தை உலவுவதுபோன்ற விடியோ வைரலாகி வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சம்

Updated On : 9 டிசம்பர், 2025 at 6:58 PM
ஒரசோலை பகுதியில் உலவிய சிறுத்தை
பகிர்:

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்ட பகுதியில் சிறுத்தை உலவுவதுபோன்ற விடியோ வைரலாகி வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், கோத்தகிரி அருகே ஒரசோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் டிசம்பா் 7-ஆம் தேதி உலவிய சிறுத்தையை சிலா் விடியோ எடுத்து இணையத்தில் பகிா்ந்தனா்.

தற்போது அந்த விடியோ வைரலாகி வரும் நிலையில் அப்பகுதி மக்கள், தோட்டத் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →