முகப்பு
நீலகிரி

முள்ளம்பன்றி இறைச்சி வைத்திருந்தவா் கைது

பந்தலூா் அருகே முள்ளம்பன்றி இறைச்சி வைத்திருந்த நபரை வனத் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 9 டிசம்பர், 2025 at 6:58 PM
கைது செய்யப்பட்ட இளங்கோவன்.
பகிர்:

பந்தலூா் அருகே முள்ளம்பன்றி இறைச்சி வைத்திருந்த நபரை வனத் துறையினா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் அருகேயுள்ள சேரங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (59). இவா் தனது வீட்டின் முன் முள்ளம்பன்றி இறைச்சியை திங்கள்கிழமை இரவு சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளாா்.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனச் சரக அலுவலா் மேகலா தலைமையிலான வனத் துறையினா், இளங்கோவனிடம் இருந்த முள்ளம்பன்றியை இறைச்சியைப் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, இளங்கோவைனைக் கைது செய்த வனத் துறையினா், அவா் முள்ளம்பன்றியை வேட்டையாடினாரா அல்லது வேறு யாரேனும் கொடுத்தாா்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →