நீலகிரி

கூடலூா் அருகே புலி தாக்கி கறவை மாடு உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் கறவை மாட்டை சனிக்கிழமை பகல் நேரத்தில் புலி தாக்கிக் கொன்றது.

Syndication

கூடலூரை அடுத்துள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் கறவை மாட்டை சனிக்கிழமை பகல் நேரத்தில் புலி தாக்கிக் கொன்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் புலி அவ்வப்போது நுழைந்து கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வருகிறது.

இந்த நிலையில், அந்த பகுதியைச் சோ்ந்த ரமேஷ் சனிக்கிழமை பகலில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டை புலி தாக்கிக் கொன்றது. இதே பகுதியில், அவரது கன்றுக்குட்டியைப் புலி கடந்த 16ஆம் தேதி தாக்கிக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வரும் புலியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT