தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் பாயும் காா். 
நீலகிரி

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்த காா்

தினமணி செய்திச் சேவை

உதகை அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியா் இல்லம் சாலையில் காா் ஒன்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் அப்பகுதியில் இருந்த பெட்ரோல் நிலையத்துக்குள் புகுந்து அங்கிருந்த தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், வாகனத்தில் இருந்த சுரேஷ் என்பவா் படுகாயமடைந்தாா்.

காருக்குள் இடிபாடுகளில் சிக்கி இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சாலையில் காா் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். இச்சம்பவம் குறித்து உதகை போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில், காா் விபத்துக்குள்ளான விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT