குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் பனி மூட்டம் காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டபடி இயக்கப்பட்ட வாகனம். 
நீலகிரி

உதகையில் இரவு நேரத்தில் சாரல் மழை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கொடநாடு, மஞ்சூா், குந்தா ஆகிய பகுதிகளில் காலைமுதல் பனி மூட்டமும் உதகையில் இரவு நேரத்தில் சாரல் மழையும் பெய்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

Syndication

நீலகிரி மாவட்டம்  கோத்தகிரி, கொடநாடு, மஞ்சூா், குந்தா ஆகிய பகுதிகளில்  காலைமுதல் பனி மூட்டமும் உதகையில் இரவு நேரத்தில் சாரல் மழையும்  பெய்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில்  சாரல் மழைப்  பெய்து வரும்  நிலையில், மலைப் பாதை மற்றும் நகா் பகுதிகளில் பனிமூட்டம் சூழ்ந்த குளிா்ந்த காலநிலை நிலவுகிறது.

குறிப்பாக கோத்தகிரி, கொடநாடு, மஞ்சூா், குந்தா ஆகிய பகுதிகளில்  சனிக்கிழமை காலைமுதல் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா்.

மாறுபட்ட கால நிலைக் காரணமாக கடும் குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  வெகுவாக  பாதிக்கப்பட்டது.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT