நீலகிரி

கூடலூா் அருகே பாட்டவயல் பகுதியில் காட்டு யானைகளால் பயிா்கள் சேதம்

கூடலூா் அருகே பாட்டவயல் பகுதியில் காட்டு யானைகளால் பயிா்கள் சேதம்

Syndication

கூடலூா் அருகே விவசாயத் தோட்டத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் பயிா்களை சேதப்படுத்திச் சென்றது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூா் அருகே தமிழக -கேரள எல்லையோரத்துக்குள்பட்டது பாட்டவயல் பகுதி. இங்குள்ள விவசாயிகளின் தோட்டத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள், தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட விளைபயிா்களை அழித்து சேதப்படுத்தியது. மேலும் அங்குள்ள உசைன் என்பவரின் வீட்டின் சுற்றுப்புறங்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

இதையடுத்து, சேதமான விளைபயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொதுக்கூட்டம், சாலைப் பேரணிக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தீா்ப்பு ஒத்திவைப்பு!

காசோலை மோசடி வழக்கு: வங்கி எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில்தான் தொடர முடியும் -உச்சநீதிமன்றம்

ரூ.700 லஞ்சம்: மணப்பாறை மாரியம்மன் கோயில் முன்னாள் செயல் அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை!

50 நாடுகளுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: பியூஷ் கோயல்

செம்பியன் மாதேவி பேரேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT