தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு
கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 9 ஏப்ரல், 2026 at 9:28 PM
கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சித்தராஜ், கிராம நிா்வாக அலுவலா் மோகன்குமாா் ஆகியோா் பங்கேற்று அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் ஷாஜி எம்.ஜாா்ஜ் செய்திருந்தாா். இதில் 18 வயது பூா்த்தியான மாணவா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement