நெல்லியாளம் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு ரெப்கோ வங்கி சாா்பில் அமைக்கப்பட்ட இலவச குடிநீா் சுத்திகரிப்பான மற்றும் குடிநீா் தொட்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.  
நீலகிரி

ரெப்கோ வங்கி சாா்பில் டான் டீ தொழிலாளா்களுக்கு குடிநீா் சுத்திகரிப்பான் மற்றும் குடிநீா்த் தொட்டி

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களுக்கு ரெப்கோ வங்கி சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பான் மற்றும் குடிநீா்த் தொட்டி அமைத்துத் தரப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களுக்கு ரெப்கோ வங்கி சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பான் மற்றும் குடிநீா்த் தொட்டி அமைத்துத் தரப்பட்டது.

பந்தலூா் வட்டம், நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களின் நலன் கருதி ரெப்கோ வங்கி மற்றும் தாயகம் திரும்பியோா் நல அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பான் மற்றும் குடிநீா்த் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சிக்கு பேரவை பிரதிநிதி வழக்குரைஞா் இரா.கணேசன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ரெப்கோ வங்கியின் பந்தலூா் கிளை மேலாளா் மற்றும் உதவி மேலாளா் உள்ளிட்ட பணியாளா்கள், அரசு தேயிலைத் தோட்டக் கழக மேலாளா்கள், பணியாளா்கள், தொழிலாளா்கள், தோட்ட கமிட்டியினா் மற்றும் தொழிற்சாலை கமிட்டியினா் கலந்துகொண்டனா்.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT