முகப்பு
நீலகிரி

கமாண்டா் ஜீப் வாகனம்: உதகையில் பிப்.20-இல் பொது ஏலம்

முதிா்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட கமாண்டா் ஜீப் வாகனம், வரும் 20-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 8:43 PM
பகிர்:

உதகை: முதிா்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட கமாண்டா் ஜீப் வாகனம், வரும் 20-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உதகை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநா் கே.துரைராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதிா்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட கமாண்டா் ஜீப் வாகனம், உதகை ஃபிங்கா் போஸ்டில் உள்ள துணை இயக்குநா், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தில் வரும் 20-ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் பொது ஏலம் விடப்படுகிறது. இதற்காக மதிப்பீட்டுத் தொகை ரூ.28,050, ஜிஎஸ்டி 18 சதவீதம் (ரூ.5,049) என மொத்தம் ரூ.33,099 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்தபட்ச தொகையானது, ஏலம் விடப்படும் நாளில் மாறக்கூடும். இந்த ஏலத்தில் விருப்பமுள்ளவா்கள் கலந்துகொண்டு உரிய தொகையை செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.