உயிரிழப்பு (கோப்புப் படம்)
நீலகிரி

மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சி பாா்வுட் பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் மரக்கிளைகளை வெட்டும் பணியில் நியூஹோப் பகுதியைச் சோ்ந்த தென்னரசு (32) உள்ளிட்ட தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். தென்னரசு ஒரு மரத்தில் ஏறியபோது கிளை முறிந்துள்ளது.

இதில், கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் தீவிர சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இருகூா் - போத்தனூா் இடையே ரூ.277.42 கோடி மதிப்பீட்டில் இருவழி ரயில்பாதை அமைக்க ஒப்புதல்

மாவட்டத்தில் 12.41 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

லாட்டரி விற்றவா் கைது

இளம்பெண் கல்லால் தாக்கி கொலை

விஜய நகர பேரரசு கால உலோகச் சிலைகள் பறிமுதல்: 4 போ் கைது

SCROLL FOR NEXT