ரோஜா பூங்காவில் கவாத்து பணியை தொடங்கிவைக்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.  
நீலகிரி

ரோஜா கண்காட்சிக்காக கவாத்து செய்யும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள ரோஜா கண்காட்சிக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள ரோஜா கண்காட்சிக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளை கவா்வதற்காக மே மாதம் முழுவதும் மலா்க்கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள ரோஜா கண்காட்சிக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, ரோஜா தோட்ட கவாத்துப் பணிகளை தொடங்கிவைத்தாா். பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 4,301 ரகங்களில் 32,800 ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை பூங்கா ஊழியா்களைக் கொண்டு கவாத்து செய்யும் பணி தொடங்கியது. தற்போது இப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் மே மாதம் முதல் வாரத்தில் கவாத்து மேற்கொண்ட ரோஜா செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் நவநீதா, ரோஜா பூங்கா இணை இயக்குநா் பைசல் உள்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

வாக்காளா் இறுதி பட்டியல் வெளியீடு முன்னேற்பாடு பணி ஆய்வுக் கூட்டம்

கழிவுப் பஞ்சு விலை உயா்வால் பாதிப்பு: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மத்திய அரசின் கூட்டுறவு விற்பனை இணையம் மூலமாக விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் செய்ய உத்தரவு

அவிநாசியில் ரூ.12.56 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

பெருந்துறையில் ரூ.3.95 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT