முகப்பு
நீலகிரி

பழங்குடியின பள்ளி மாணவா்களுக்கு டெஸ்க், பெஞ்சுகள்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:52 AM
கூடலூா் பகுதியில் பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்பட்ட டெஸ்க், பெஞ்சுகள்.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:52 PM

கூடலூா் பகுதியில் பழங்குடியின பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காளீஸ்வரி அறக்கட்டளை, ‘சீராக்கு’ அமைப்பு ஆகியன சாா்பில் டெஸ்க், பெஞ்சுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கூடலூா் பகுதியில் உள்ள தேவாலா பழங்குடியினா் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, காா்குடி பகுதியிலுள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, அம்பலமூலை மற்றும் கோழிக்கொல்லி பகுதிகளில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளிகளில் மாணவா்கள் அமா்ந்து படிக்க வசதியாக டெஸ்க், பெஞ்சுகளை காளீஸ்வரி அறக்கட்டளையும், சீராக்கு அமைப்பும் இணைந்து வழங்கின.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:52 AM

இதில், சீராக்கு அமைப்பின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement