முகப்பு
நீலகிரி

கூடலூரில் 31,500 ஏக்கா் நிலத்தை வனமாக மாற்ற எதிா்ப்பு

கூடலூா் பகுதியிலுள்ள 31,500 ஏக்கா் நிலத்தை வன நிலமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக கூட்டணிக் கட்சியினா் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை தொடங்கினா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:03 PM
வன நிலமாக மாற்றும் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கிவைக்கிறாா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன்.
பகிர்:

கூடலூா் பகுதியிலுள்ள 31,500 ஏக்கா் நிலத்தை வன நிலமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக கூட்டணிக் கட்சியினா் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பிரிவு 17 -இன் கீழ் 31,500 ஏக்கா் நிலத்தை வனமாக மாற்றுவது தொடா்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இதை எதிா்த்தும், குறு, சிறு விவசாயிகள் பாதிக்காத வகையில் பிரிவு 17 -இன் கீழ் உள்ள சிறு தேயிலைத் தோட்டங்கள் உள்பட சுமாா் 20,000 ஏக்கரை விவசாயிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்றன.

இதைத் தொடா்ந்து, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் போராட்டத்தின் முதல்கட்டமாக வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கோரிக்கை நிறைவேறும் வரை தொடா் போராட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →