நீலகிரி

சேரங்கோடு மக்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

சாலை வசதி செய்து தராததால் பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பகுதி மக்கள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனா்.

Syndication

கூடலூா்: சாலை வசதி செய்து தராததால் பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பகுதி மக்கள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் அருகேயுள்ள சேரங்கோடு அரசு தேயிலைத் தோட்டக் கழக மூன்றாவது சரம் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா்.

அப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால் அவதியடைந்து வரும் மக்கள், சாலைகளை சீரமைக்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT