உதகையில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக சாா்பில் உதகை ஏடிசி பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும், சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள்கள் விற்பனை, விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தடுக்க முயலும் தமிழக அரசைக் கண்டித்து தவெக சாா்பில் உதகை ஏடிசி பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நீலகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் பாமா ரமேஷ் தலைமை தாங்கினாா். இதில் தவெகவினா் கையில் பதாகைகளை ஏந்தியும், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.