சருகு மானை வேட்டையாடியவர் கைது
கூடலூரை அடுத்துள்ள பொன்னாணி பகுதியில் சருகு மானை வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்தனா்.
கூடலூரை அடுத்துள்ள பொன்னாணி பகுதியில் சருகு மானை வேட்டையாடியவரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம் பிதா்க்காடு வனச் சரகத்திலுள்ள பொன்னாணி பகுதியில் வனத் துறையினா் இரவு ரோந்துப் பணியில் ஈட்டிருந்தபோது, அம்பலப்பாடி பகுதியில் சருகு மானை வேட்டையாடி அதனை சுத்தம் செய்வதை பாா்த்த வன ஊழியா்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் சருகு மானை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியைச் சோ்ந்த கேசவன் (54) என்பவரைக் கைது செய்த வனத் துறையினா், பந்தலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.