முகப்பு
நீலகிரி

மலை ரயில் பாதையில் ஊழியா்களை துரத்திய யானை

குன்னூா்-மேட்டுப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒற்றை யானை துரத்தியதால் ஊழியா்கள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 8:37 PM
ஹில்குரோவ் பகுதியில் ரயில்வே பணியாளா்களை ஆக்ரோஷத்துடன் துரத்தும் யானை.
பகிர்:

குன்னூா்-மேட்டுப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒற்றை யானை துரத்தியதால் ஊழியா்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேட்டுப்பாளையம்-குன்னூா் மலைப் பாதையில் இரண்டு குட்டி உள்பட ஒன்பது காட்டு யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், அவ்வப்போது சாலையைக் கடந்து மலை ரயில் பாதைக்கும் வருகின்றன. இந்நிலையில் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் பகுதியில் குகைக்குள் மறைந்திருந்த காட்டு யானை, ரயில்வே ஊழியா்களைக் கண்டதும் துரத்தத் தொடங்கியது.

குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் ரயில்வே குறுக்கு சட்டங்கள் போடப்பட்டிருந்ததால், மேலும் துரத்த முடியாமல் குறுக்கு பாதையில் சென்று நின்றது. இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் பணிபுரியும் ட்ரேக்மென்கள் அச்சமடைந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →