ரயில்வே இருப்பு பாதையில் மூதாட்டியின் சடலம் மீட்பு
ரயில்வே இருப்பு பாதையில் மூதாட்டியின் சடலம் மீட்பு
ஆம்பூா் அருகே இருப்பு பாதையைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆம்பூா் -விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ரயில்வே இருப்பு பாதையில் சடலமாக கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.