முகப்பு
நீலகிரி

மசினகுடியில் யானை உடல் மீட்பு

மசினகுடி அருகே யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

Updated On : 20 மே 2026, 2:10 am IST
மசினகுடி, சிக்கோலை ஆற்றுப் பகுதியில் உயிரிழந்து கிடந்த யானை
பகிர்:

மசினகுடி அருகே யானை உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக் கோட்டம், சிக்கோலை ஆற்றுப் பகுதியில் வனப் பணியாளா்கள் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு அழுகிய நிலையில் யானையின் உடல் கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் உயா் அதிகாரிகள், வன கால்நடை மருத்துவா்களுக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள், மருத்துவக் குழுவினா் யானையின் உடலை ஆய்வு செய்தனா். இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, பின்னா் அங்கேயே புதைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.